பொதுவாக மிகச் சில விஷயங்களே உங்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. உறங்குவது எப்படி என்றுகூட உங்களுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. படுக்கையில் படுக்க வேண்டியதுதான். உறக்கம் வந்துவிடும். அவ்வளவுதான் எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அன்று!
எப்படிச் சாப்பிடக் கற்றுக்கொள்கிறோமோ, வேற எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோமோ, அப்படியே எப்படி உறங்குவது என்றும் கற்கவேண்டும். அப்படி ஒருவன் கற்றுக்கொள்ளாவிட்டால் அவன் தவறான முறையில் உறங்குவான். அல்லது பல ஆண்டுகள் அனுபவத்திற்குப் பின்பே சரியாக உறங்கக் கற்றுக்கொள்வான். சரியாக உறங்கத் தெரியாத அந்தக் காலமெல்லாம் அதன் காரணமாபபல தீமைகள் உண்டாகும்.
இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் நிறையப் பிழைகள் செய்து, மடத்தனமான காரியங்கள் பலப்பல செய்து, நிறையத் துன்பம் அனுபவித்தபின்பே நரைகூடிக் கிழப்பருவம் எய்திய பின்பே, ஒன்றைச் சரியாகச் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்கின்றனர். அப்படியில்லாமல், நீங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே, உங்கள் பெற்றோர்களோ அல்லது உங்களைக் கவனித்துக் கொள்கிற மற்றவர்களோ நீங்கள் செய்யும் காரியங்களையெல்லாம் எப்படிச் செய்வது, அவற்றைச் செய்யும் சரியான முறை எது என்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்களானால், பல ஆண்டுகாலமாக நீங்கள் அவற்றைப் பிழைபடச் செய்யும் தவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
இப்பொழுது நீங்கள் பிழைகள் செய்கிறீர்கள் என்பது மட்டுமன்று, நீங்கள் பிழையாகச் செய்கிறீர்கள் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை! ஆகவே அவற்றின் விளைவாக நீங்கள் நோயுறும் போது, களைப்படையும் போது, நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை சரியாகச் செய்வது எப்படி என்று தெரியாமல் விழிக்கும்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். சில குழந்தைகள் எதுவுமே சொல்லித் தரப்படாமல் வளர்கிறார்கள். ஆகவே மிக எளிய ஒரு விஷயத்தை மிகச் சாதாரண ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, உதாரணமாக சுத்தமாக இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு எத்தனையோ ஆண்டுகள் பிடிக்கின்றன.
முறையாக வாழக் கற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒரு கலை. மிகச் சிறு பிராயத்திலேயே அதைக் கற்கத் தொடங்கி, அதற்காக முயற்சி எடுத்துக்கொள்ளாவிடில் ஒருவன் ஒருநாளும் அதைச் சரியாகக் கற்றுக்கொள்ளமாட்டான். உடலை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக்கொள்ளவும், மனத்தின் அமைதியும் உள்ளத்தில் நல்லெண்ணமும் இருக்கக் கற்றுக்கொள்ளாவிடில் ஏதோ வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை கூட ஒருவன் வாழமுடியாது.
இன்பமாக வாழ்வதைப்பற்றி, சிறப்பாக வாழ்வதைப்பற்றிப் பேசவில்லை. வாழ்க்கை என்று சொல்லிக்கொள்வதற்குரிய ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே இவையெல்லாம் இன்றியமையாதவை ஆகும். தங்களுடைய குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லித் தருகிறவர்கள் பலபேர் இருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை
புதன், 4 மே, 2011
தீய தூண்டுதல்களும் சிந்தனைகளும் - அன்னை
அன்னையே, நாங்கள் உம்மிடம் வரும்போது, எவ்வளவு நல்லவர்களாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். அதாவது மிக நல்ல சிந்தனைகளுடன் வர விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் அதற்கு மாறாக பகலில் எங்களிடமிருந்த எல்லாத் தீய தூண்டுதல்களும் தீய சிந்தனைகளும் முன்னுக்கு வருகின்றன.
ஒருவேளை நீ அவற்றை நீக்கிவிடுவதற்கு வசதியாக அவை வரலாம். அவை வந்தால் அவற்றை அர்ப்பணித்து அவை உன்னிடமிருந்து நீங்கவேண்டும் என்று கேட்கலாம். அதுவேதான் காரணமாக இருக்கலாம், உயர் உணர்வு தூய்மை செய்வதற்காக வேலை செய்வதால் அவ்வாறு நடக்கலாம். குறைகளை மறைப்பதில் பயனில்லை, அவற்றைப் பின்னால் தள்ளி ஒரு திரையைப் போட்டுவிட்டதால் அவை இல்லாமல் போய்விடாது. தன்னுடைய நிலைமையை உள்ளது உள்ளபடியே தெரிந்துகொள்வது நல்லது. தனது தவறான வாழ்வை விட்டுவிட ஆயத்தமாக இருந்தால் அதுவே நல்லது.
நீ என்னிடம் வரும்போது எல்லா தீய இயக்கங்களும் மேலே வந்து, தங்களைக் காட்டிக்கொள்ள நீ அனுமதித்து, அவற்றை அர்ப்பணித்தால், "நான் இப்படித்தான் இருந்தேன்" என்று சொல்லி, அதே சமயம் அப்படி இருக்கக்கூடாது என்கிற ஆர்வமும் இருந்தால், நீ என் முன்னால் நிற்கும் இந்த விநாடி மிக அதிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆம், சில வினாடிகளில் அந்தத் தீய இயக்கங்களை நீக்கி விடுவதற்கான உதவியை நீ பெற்றுவிடலாம். மாறாக, நீ ஒரு சிறிய புனிதவான் மாதிரி வந்துவிட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்தியோடு போய்விட்டாயானால் அதனால் அதிகப் பயனில்லை.
உயர் உணர்வு... அவ்வாறு செயல்படுகிறது, முன்பு ஒளி இல்லாத இடத்தில் ஒளியைக் கொண்டுவரும் ஒளிக்கதிரைப் போன்றது அது. உன்னைப் பொறுத்தவரையில் அந்தத் தவறான இயக்கத்தை நீக்க விரும்பும் உள நிலையில் நீ இருக்க வேண்டும். அதை ஒட்டிப் பிடித்துக்கொள்ள விரும்பக்கூடாது. அதை உன்னிடமிருந்து நீக்கிவிட மனப்பூர்வமாக விரும்புவாயானால் அது அப்படி முன்னால் வருவது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
ஒருவேளை நீ அவற்றை நீக்கிவிடுவதற்கு வசதியாக அவை வரலாம். அவை வந்தால் அவற்றை அர்ப்பணித்து அவை உன்னிடமிருந்து நீங்கவேண்டும் என்று கேட்கலாம். அதுவேதான் காரணமாக இருக்கலாம், உயர் உணர்வு தூய்மை செய்வதற்காக வேலை செய்வதால் அவ்வாறு நடக்கலாம். குறைகளை மறைப்பதில் பயனில்லை, அவற்றைப் பின்னால் தள்ளி ஒரு திரையைப் போட்டுவிட்டதால் அவை இல்லாமல் போய்விடாது. தன்னுடைய நிலைமையை உள்ளது உள்ளபடியே தெரிந்துகொள்வது நல்லது. தனது தவறான வாழ்வை விட்டுவிட ஆயத்தமாக இருந்தால் அதுவே நல்லது.
நீ என்னிடம் வரும்போது எல்லா தீய இயக்கங்களும் மேலே வந்து, தங்களைக் காட்டிக்கொள்ள நீ அனுமதித்து, அவற்றை அர்ப்பணித்தால், "நான் இப்படித்தான் இருந்தேன்" என்று சொல்லி, அதே சமயம் அப்படி இருக்கக்கூடாது என்கிற ஆர்வமும் இருந்தால், நீ என் முன்னால் நிற்கும் இந்த விநாடி மிக அதிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆம், சில வினாடிகளில் அந்தத் தீய இயக்கங்களை நீக்கி விடுவதற்கான உதவியை நீ பெற்றுவிடலாம். மாறாக, நீ ஒரு சிறிய புனிதவான் மாதிரி வந்துவிட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்தியோடு போய்விட்டாயானால் அதனால் அதிகப் பயனில்லை.
உயர் உணர்வு... அவ்வாறு செயல்படுகிறது, முன்பு ஒளி இல்லாத இடத்தில் ஒளியைக் கொண்டுவரும் ஒளிக்கதிரைப் போன்றது அது. உன்னைப் பொறுத்தவரையில் அந்தத் தவறான இயக்கத்தை நீக்க விரும்பும் உள நிலையில் நீ இருக்க வேண்டும். அதை ஒட்டிப் பிடித்துக்கொள்ள விரும்பக்கூடாது. அதை உன்னிடமிருந்து நீக்கிவிட மனப்பூர்வமாக விரும்புவாயானால் அது அப்படி முன்னால் வருவது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
உன்னுடையச் சூழலை நீயே உண்டாக்கிக் கொள் - அன்னை
அன்னையே, ஓர் ஆன்மிகச் சூழல் புறச் சூழ்நிலைகளை விட முக்கியமானது. அதுவும் கிடைத்து, தான் சுவாசிக்கவும் வாழவும் வேண்டிய தனது சொந்த ஆன்மிகக் காற்றையும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே முன்னேற்றத்திற்கு வேண்டிய சரியான நன்நிலை ஆகும். "அப்படிப்பட்ட சூழலைப் பெறுவதும் அதேசமயம் தன்னுடைய உண்மையான ஆன்மிகச் சூழலைத் தானே உண்டாக்கிக் கொள்வதும் எப்படி?
ஓர், அகவொழுக்கப் பயிற்சியின் மூலம் அதைச் செய்யலாம். உனது சிந்தனைகளை அடக்கி, அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், உனது செயல்களை அடக்கி அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், எல்லா ஆசைகளையும், பயனற்ற புறத்தன்மை கொண்ட, சாதாரண நடவடிக்கைகளையெல்லாம் நீக்கிவிடுவதன் மூலம், சாதாரண விஷயங்கள், சாதாரணச் சிந்தனைகள், சாதாரணச் செயல்கள், சாதாரண எதிர்ச் செயல்கள் இவற்றிலிருந்தெல்லாம் உன்னைப் பிரித்து, அதிகத் தீவிரமான அகவாழ்வு வாழ்வதன் மூலம், உன்னைச் சுற்றிலும் நீ விரும்பும் சூழலை உண்டாக்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக, கண்டதையெல்லாம் படிக்காமல் எதைப் பற்றியும் பேசி எதை வேண்டுமானாலும் செய்யாமல், யோகப் பாதையில் செல்வதற்கு உதவக்கூடியவைகளை மட்டுமே படித்தால், தெய்வானுபூதிக்கு இட்டுச் செல்வதற்கு இசைந்தவைகளை மட்டுமே செய்தால், புற விஷயங்களை நோக்கித் திரும்பிய ஆசைகளையும் தூண்டுதல்களையும் நீக்கினால், உன்னுடைய மனோமய ஜீவனை அமைதிப்படுத்தி உன்னுடைய பிராண ஜீவனின் தாபத்தைத் தணித்தால், வெளியேயிருந்து வரும் சூசனைகளை உன் உள்ளே வரவிடாமல் தடுத்து, உன்னைச் சுற்றிலும் இருக்கும் மனிதர்களின் செயல் உன்னைப் பாதிக்காத நிலையை நீ அடைந்தால் எதனாலும் தீண்ட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்த ஆன்மிகச் சூழலை உருவாக்கிவிடுவாய், இனி உனது சூழல் சந்தர்ப்பங்களைப் பொறுத்ததாகவோ நீ யாருடன் வசிக்கிறாய், எந்த நிலையில் வசிக்கிறாய் என்பவைகளை பொறுத்ததாகவோ இருக்கவே இருக்காது.
ஏனெனில் நீ உன்னுடைய சொந்த ஆன்மிகச் சூழலாகிய வேலிக்குள் வாழ்கிறாய். அதைப் பெறும் வழி: ஆன்மிக வாழ்வு ஒன்றிலேயே கவனம் செலுத்துதல், ஆன்மிக வாழ்விற்கு உதவும் நூல்களை மட்டுமே படித்தல், ஆன்மிக வாழ்விற்கு இட்டுச் செல்லும் காரியங்களையே செய்தல், இப்படி அப்பொழுது உனது சூழலை நீயே உண்டாக்கிக் கொள்வாய். நீ எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்தால், பிறர் சொல்வதற்கெல்லாம் செவி சாய்த்தால், இவருடைய அறிவுரையின்படியும் அவருடைய அருளுரையின்படியும் நடந்தால், பிற விஷயங்களின்மேல் நிறைய ஆசை கொண்டிருந்தால், உன்னுடைய ஆன்மிகச் சூழலை நீயே உண்டாக்கிக்கொள்ள இயலாது. எல்லோருக்கும் இருப்பது போன்ற சாதாரண சூழ்நிலையே உனக்கும் இருக்கும்.
ஓர், அகவொழுக்கப் பயிற்சியின் மூலம் அதைச் செய்யலாம். உனது சிந்தனைகளை அடக்கி, அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், உனது செயல்களை அடக்கி அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், எல்லா ஆசைகளையும், பயனற்ற புறத்தன்மை கொண்ட, சாதாரண நடவடிக்கைகளையெல்லாம் நீக்கிவிடுவதன் மூலம், சாதாரண விஷயங்கள், சாதாரணச் சிந்தனைகள், சாதாரணச் செயல்கள், சாதாரண எதிர்ச் செயல்கள் இவற்றிலிருந்தெல்லாம் உன்னைப் பிரித்து, அதிகத் தீவிரமான அகவாழ்வு வாழ்வதன் மூலம், உன்னைச் சுற்றிலும் நீ விரும்பும் சூழலை உண்டாக்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக, கண்டதையெல்லாம் படிக்காமல் எதைப் பற்றியும் பேசி எதை வேண்டுமானாலும் செய்யாமல், யோகப் பாதையில் செல்வதற்கு உதவக்கூடியவைகளை மட்டுமே படித்தால், தெய்வானுபூதிக்கு இட்டுச் செல்வதற்கு இசைந்தவைகளை மட்டுமே செய்தால், புற விஷயங்களை நோக்கித் திரும்பிய ஆசைகளையும் தூண்டுதல்களையும் நீக்கினால், உன்னுடைய மனோமய ஜீவனை அமைதிப்படுத்தி உன்னுடைய பிராண ஜீவனின் தாபத்தைத் தணித்தால், வெளியேயிருந்து வரும் சூசனைகளை உன் உள்ளே வரவிடாமல் தடுத்து, உன்னைச் சுற்றிலும் இருக்கும் மனிதர்களின் செயல் உன்னைப் பாதிக்காத நிலையை நீ அடைந்தால் எதனாலும் தீண்ட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்த ஆன்மிகச் சூழலை உருவாக்கிவிடுவாய், இனி உனது சூழல் சந்தர்ப்பங்களைப் பொறுத்ததாகவோ நீ யாருடன் வசிக்கிறாய், எந்த நிலையில் வசிக்கிறாய் என்பவைகளை பொறுத்ததாகவோ இருக்கவே இருக்காது.
ஏனெனில் நீ உன்னுடைய சொந்த ஆன்மிகச் சூழலாகிய வேலிக்குள் வாழ்கிறாய். அதைப் பெறும் வழி: ஆன்மிக வாழ்வு ஒன்றிலேயே கவனம் செலுத்துதல், ஆன்மிக வாழ்விற்கு உதவும் நூல்களை மட்டுமே படித்தல், ஆன்மிக வாழ்விற்கு இட்டுச் செல்லும் காரியங்களையே செய்தல், இப்படி அப்பொழுது உனது சூழலை நீயே உண்டாக்கிக் கொள்வாய். நீ எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்தால், பிறர் சொல்வதற்கெல்லாம் செவி சாய்த்தால், இவருடைய அறிவுரையின்படியும் அவருடைய அருளுரையின்படியும் நடந்தால், பிற விஷயங்களின்மேல் நிறைய ஆசை கொண்டிருந்தால், உன்னுடைய ஆன்மிகச் சூழலை நீயே உண்டாக்கிக்கொள்ள இயலாது. எல்லோருக்கும் இருப்பது போன்ற சாதாரண சூழ்நிலையே உனக்கும் இருக்கும்.
இறைவனது வேலையைச் செய்ய இங்கு வாருங்கள் - அன்னை
யாராவது என்னிடம் வந்து, "என்னுடைய யோக சாதனைக்காக நான் ஆசிரமத்திற்கு வர விரும்புகிறேன்" என்று சொல்லும் போதெல்லாம், "வேண்டாம் வேண்டாம், அதற்காகவென்றால் இங்கு வரவேண்டாம். மற்றெங்கேயும்விட இங்கு கஷ்டமாக இருக்கும்" என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால், யாராவது, "நான் வேலை செய்ய வருகிறேன், என்னால் எந்த வகையிலாவது உபயோகமாக இருக்கக் கூடுமானால் அதற்காக வருகிறேன்" என்று சொன்னால் அப்போது சரி என்று சொல்கிறேன். ஆனால் யாராவது வந்து, "வெளியே எனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன, அந்தக் கஷ்டங்களை என்னால் வெல்ல முடியவில்லை, இங்கே வந்தால் அது உதவியாக இருக்கும்" என்று சொன்னால், "வேண்டாம் வேண்டாம், இங்கே மிக அதிகக் கஷ்டமாக இருக்கும், உன்னுடைய கஷ்டங்கள் மிகவும் அதிகமாகும்" என்று சொல்லிவிடுகிறேன். அதுதான் உண்மை நிலைமை. ஏனென்றால், இங்குள்ள கஷ்டங்கள் தனிப்பட்ட கஷ்டங்களல்ல, அவை கூட்டுக் கஷ்டங்கள்.
ஆகவே, உன்னுடைய சொந்தக் கஷ்டங்களோடு வெளியிலிருந்து வரும் உராய்தல்கள், தொடர்புகள், எதிர்வினைகள் எல்லாம் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சோதனையாக வருகின்றன. எது உன்னிடமுள்ள பலவீனமோ, எது உனக்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கின்றதோ, அதில்தான் அடி விழும். எந்த வார்த்தையை நீ கேட்கக்கூடாது என்றிருந்தாயோ அந்த வார்த்தையைத்தான் யாராவது சொல்வார்கள்.
எந்தச் செயல் உனக்கு அதிர்ச்சி தருமோ அதைத்தான் யாராவது செயல்வார்கள். எந்தச் சூழ்நிலை எந்த இயக்கம், எந்த நிகழ்ச்சி அல்லது வேறு ஏதாவது நீ வேண்டாம் என்றிருந்தாயோ அதுதான் உன்முன்வந்து நிற்கும், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், நீ யோகம் செய்வது, உனக்காக மட்டுமல்ல, நீ எல்லோருக்காகவும் யோகம் செய்கிறாய் - செய்ய வேண்டுமென்று நிநைக்காமலே, தன்னியக்கமாகவே.
ஆகவே, யாராவது என்னிடம் வந்து, சாந்தி பெறுவதற்காக, அமைதி கிடைப்பதற்காக, ஓய்விற்காக, என்னுடைய யோக சாதனைக்காக நான் இங்கே வர விரும்புகிறேன் என்று சொன்னால், வேண்டாம் வேண்டாம் வேண்டாம், வேறு எங்கேயாவது போய்விடுங்கள், நீங்கள் வேறு எங்கேயிருந்தாலும் இங்கே இருப்பதைவிட அதிக அமைதியோடிருப்பீர்கள் என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால், யாராவது வந்து, "இறைவனது திருப்பணிக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் தரும் எந்த வேலையையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்று சொல்வார்களானால், "நல்லது, உன்னிடம் நல்லெண்ணம், நீடித்து உழைக்கும் திறன், ஏதோ சிறிது திறமை இருந்தால் சரிதான். ஆனால் உனது அக வளர்ச்சிக்கு வேண்டிய தனிமை உனக்குத் தேவை என்றால் வேறு எங்கேயாவது, எங்கேயானாலும் சரிதான், போ, இங்கே வராதே" என்றுதான் சொல்கிறேன்.
ஆனால், யாராவது, "நான் வேலை செய்ய வருகிறேன், என்னால் எந்த வகையிலாவது உபயோகமாக இருக்கக் கூடுமானால் அதற்காக வருகிறேன்" என்று சொன்னால் அப்போது சரி என்று சொல்கிறேன். ஆனால் யாராவது வந்து, "வெளியே எனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன, அந்தக் கஷ்டங்களை என்னால் வெல்ல முடியவில்லை, இங்கே வந்தால் அது உதவியாக இருக்கும்" என்று சொன்னால், "வேண்டாம் வேண்டாம், இங்கே மிக அதிகக் கஷ்டமாக இருக்கும், உன்னுடைய கஷ்டங்கள் மிகவும் அதிகமாகும்" என்று சொல்லிவிடுகிறேன். அதுதான் உண்மை நிலைமை. ஏனென்றால், இங்குள்ள கஷ்டங்கள் தனிப்பட்ட கஷ்டங்களல்ல, அவை கூட்டுக் கஷ்டங்கள்.
ஆகவே, உன்னுடைய சொந்தக் கஷ்டங்களோடு வெளியிலிருந்து வரும் உராய்தல்கள், தொடர்புகள், எதிர்வினைகள் எல்லாம் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சோதனையாக வருகின்றன. எது உன்னிடமுள்ள பலவீனமோ, எது உனக்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கின்றதோ, அதில்தான் அடி விழும். எந்த வார்த்தையை நீ கேட்கக்கூடாது என்றிருந்தாயோ அந்த வார்த்தையைத்தான் யாராவது சொல்வார்கள்.
எந்தச் செயல் உனக்கு அதிர்ச்சி தருமோ அதைத்தான் யாராவது செயல்வார்கள். எந்தச் சூழ்நிலை எந்த இயக்கம், எந்த நிகழ்ச்சி அல்லது வேறு ஏதாவது நீ வேண்டாம் என்றிருந்தாயோ அதுதான் உன்முன்வந்து நிற்கும், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், நீ யோகம் செய்வது, உனக்காக மட்டுமல்ல, நீ எல்லோருக்காகவும் யோகம் செய்கிறாய் - செய்ய வேண்டுமென்று நிநைக்காமலே, தன்னியக்கமாகவே.
ஆகவே, யாராவது என்னிடம் வந்து, சாந்தி பெறுவதற்காக, அமைதி கிடைப்பதற்காக, ஓய்விற்காக, என்னுடைய யோக சாதனைக்காக நான் இங்கே வர விரும்புகிறேன் என்று சொன்னால், வேண்டாம் வேண்டாம் வேண்டாம், வேறு எங்கேயாவது போய்விடுங்கள், நீங்கள் வேறு எங்கேயிருந்தாலும் இங்கே இருப்பதைவிட அதிக அமைதியோடிருப்பீர்கள் என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால், யாராவது வந்து, "இறைவனது திருப்பணிக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் தரும் எந்த வேலையையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்று சொல்வார்களானால், "நல்லது, உன்னிடம் நல்லெண்ணம், நீடித்து உழைக்கும் திறன், ஏதோ சிறிது திறமை இருந்தால் சரிதான். ஆனால் உனது அக வளர்ச்சிக்கு வேண்டிய தனிமை உனக்குத் தேவை என்றால் வேறு எங்கேயாவது, எங்கேயானாலும் சரிதான், போ, இங்கே வராதே" என்றுதான் சொல்கிறேன்.
ஸ்ரீ அரவிந்த யோகம்
புண்ணிய பூமியாகிய இப்பாரத நாட்டின்கண் வேத உபநிடதங்களைக் கானம் செய்து சென்ற பண்டைக்கால முனிபுங்கவர்கள், உள்ளவன் ஒருவனேயென்றும், அவ்வொருவனது உண்மையின் பொறிகளே உலகமாயும், உயிர்களாயும் பரிணமித்தனவென்றும், அவனது லீலையினாலும் மாய சக்தியினாலும் இவ்வுயிர்கள் தங்களுக்கும் பரம்பொருக்கும் உள்ள ஒற்றுமையை மறந்து தனியுணர்வு பெற்று அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்பதே இவைகளின் பந்தங்களுக்கும் அல்லல்களுக்கும் காரணமென்றும், இழந்த ஒற்றுமையுணர்வை மீண்டும் பெற்று மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, அவனுடன் ஐக்கியப்படுவதே வாழ்வின் லட்சியம் என்றும் தங்களது அனுபவத்தில் கண்டறிந்தனர்.
இவ்விதம் அஞ்ஞானத்தினால் பிரிந்த உயிர்கள் மீண்டும் கடவுளுடன் ஒற்றுமைப்படுவதற்காகக் கையாளப்படும் முறையே யோகம் எனப்படுவது. நமது முன்னோர்கள் கண்ட யோக முறை இன்றும் நமக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும், நாளடைவில் அவரவர்களது தரிசனத்திற்கும் அனுபவத்திற்கும் தகுந்தாற்போல் யோக லட்சியத்திலும் யோக வழிமுறைகளிலும் வித்தியாசங்கள் ஏற்படவே, உபநிடதங்களின் சாரம் என மதிக்கப்படும் பகவத் கீதை தோன்றி, பல வழிமுறைகளையும் தொகுத்துக் கூறி, அவைகளை ஒன்றோடொன்று இணங்கும்படிச் செய்து, நமக்கு மேலானதொரு வழியையும் காட்டி விளங்குகின்றது. கீதை காட்டும் இவ்வழிதான் என்ன?
கீதையின் பரம இரகசியம்!
நான் என்னும் தன்முனைப்பு நசித்து, தாழ்ந்த, பரிபக்குவமற்ற, முக்குண மயமான மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, உலகத்தை துறந்து, சொரூபம் சலனம் என்பவையற்ற அக்ஷர பிரம்மனில் லயமாய் விடுவது யோகத்தின் ஒரு லட்சியமெனக் கீதை கூறுகிறது. ஆயினும், அதோடு நிற்காமல், வாழ்விலிருந்து கொண்டே ஜீவன் பூரணமடைவதன் பொருட் மேற்சொன்ன அக்ஷர பிரம்மனுக்கும், சர்வ பூதானியாயிருந்து பிரகிருதியின் சலனங்களுக்குட்பட்ட க்ஷர பிரம்மனுக்கும் அப்பால் சுதந்திரமாக நின்று, இவைகளெல்லாவற்றையும் நடத்தும் புருஷோத்தமனது உள்ளமை சத், சித், ஆனந்தம் என்னும் இயல்புகளுடன் ஒன்றுபட்டு (மத்பாவம் ஆகாதா), அவன்பால் சுதந்திரமாயிருந்து, உலகில் ஜீவன் முக்தனாக வினைபுரிவதே மேலான லட்சியமெனக் கீதை எடுத்துக் காட்டுகிறது.
நாம் காணும் அத்யாத்ம உண்மையைப் புறவாழ்க்கையிலும் உபயோகித்து, உலகின் மூலமாகப் பரமேச்வரனையும் உடைமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அதன் முக்கிய உபதேசமாகும். நமது உண்மையான ஜீவன் கடவுளே என்பதையும், அது மற்ற ஜீவர்களுடன் ஒன்றுபட்டது என்பதையும் அறிந்து, நமது வாழ்க்கை முழுவதையும் கடவுளது நிலைக்கு உயர்த்துவது, அவனிடம் வசிப்பது, நமது உணர்வை அவனது உணர்வுடன் இணங்கச் செய்வது, நமது பரிபக்குவமடைந்த இயல்பை அவனது சம்பூரண இயல்பின் பிரதிபிம்பமாகச் செய்வது, நமது சிந்தனை, உணர்ச்சிகள் முற்றிலும் தெய்வீக ஞானத்தினால் தூண்டப்படும்படிச் செய்வது, நமது எல்லாவற்றையும் அவனுக்கே சமர்ப்பித்துவிடுவது, நாம் புரியும் வினைகளையெல்லாம் யக்ஞேச்வரனான அவனுக்கே வேள்வியாக அளிப்பது, புவனேச்சவரனையும் பராபரனாயும் உள்ள அவனது சித்தமும் வினைகளுமே நம் மூலமாக இவ்வுலகில் நடைபெறும்படி விடுவது, அவனது அன்பிலும் களிப்பிலும் நமது விருப்பம் லயித்து விடுவது - இதுவே பூரண நிலை, இதுவே மக்களது வாழ்வின் இறுதியான பொருளும் உண்மையான லட்சியமும், இதுவே கீதையின் பரம ரகசியம்.
ஸ்ரீ அரவிந்தரின் யோக வழி!
சற்றேறக்குறைய இம்மகா உபதேசத்தை, நமது நாட்டில் இதுகாறும் அப்போதைக்கப்போது தோன்றியுள்ள மகான்கள் தங்கள் தங்களது பிரத்தியேக அனுபவ வாயிலாகக் கூறி வந்திருக்கின்றனர். வேத உபநிடதங்களைக் காணம் செய்த ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக உதித்த ஸ்ரீ அரவிந்தரும் இம்மகா உபதேசத்தையே தமது உபதேசத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் கண்ட அனுபவத்தோடும் அவர்கள் வெளியிட்ட உபதேசத்தோடும் நின்றுவிடாமல், அவைகளினின்றும் தொடங்கி, அவைகளுக்கப்பால் சென்று, யோகத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் ஒரு புதிய வழி முறையையும் நிறுவியிருக்கிறார். அவரது யோகம் பூரண யோகம் அல்லது உபநிடதங்கள் கூறும் அதிமன யோகம் (Supramental Yoga) எனப்படும்.
இவ்விதம் அஞ்ஞானத்தினால் பிரிந்த உயிர்கள் மீண்டும் கடவுளுடன் ஒற்றுமைப்படுவதற்காகக் கையாளப்படும் முறையே யோகம் எனப்படுவது. நமது முன்னோர்கள் கண்ட யோக முறை இன்றும் நமக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும், நாளடைவில் அவரவர்களது தரிசனத்திற்கும் அனுபவத்திற்கும் தகுந்தாற்போல் யோக லட்சியத்திலும் யோக வழிமுறைகளிலும் வித்தியாசங்கள் ஏற்படவே, உபநிடதங்களின் சாரம் என மதிக்கப்படும் பகவத் கீதை தோன்றி, பல வழிமுறைகளையும் தொகுத்துக் கூறி, அவைகளை ஒன்றோடொன்று இணங்கும்படிச் செய்து, நமக்கு மேலானதொரு வழியையும் காட்டி விளங்குகின்றது. கீதை காட்டும் இவ்வழிதான் என்ன?
கீதையின் பரம இரகசியம்!
நான் என்னும் தன்முனைப்பு நசித்து, தாழ்ந்த, பரிபக்குவமற்ற, முக்குண மயமான மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, உலகத்தை துறந்து, சொரூபம் சலனம் என்பவையற்ற அக்ஷர பிரம்மனில் லயமாய் விடுவது யோகத்தின் ஒரு லட்சியமெனக் கீதை கூறுகிறது. ஆயினும், அதோடு நிற்காமல், வாழ்விலிருந்து கொண்டே ஜீவன் பூரணமடைவதன் பொருட் மேற்சொன்ன அக்ஷர பிரம்மனுக்கும், சர்வ பூதானியாயிருந்து பிரகிருதியின் சலனங்களுக்குட்பட்ட க்ஷர பிரம்மனுக்கும் அப்பால் சுதந்திரமாக நின்று, இவைகளெல்லாவற்றையும் நடத்தும் புருஷோத்தமனது உள்ளமை சத், சித், ஆனந்தம் என்னும் இயல்புகளுடன் ஒன்றுபட்டு (மத்பாவம் ஆகாதா), அவன்பால் சுதந்திரமாயிருந்து, உலகில் ஜீவன் முக்தனாக வினைபுரிவதே மேலான லட்சியமெனக் கீதை எடுத்துக் காட்டுகிறது.
நாம் காணும் அத்யாத்ம உண்மையைப் புறவாழ்க்கையிலும் உபயோகித்து, உலகின் மூலமாகப் பரமேச்வரனையும் உடைமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அதன் முக்கிய உபதேசமாகும். நமது உண்மையான ஜீவன் கடவுளே என்பதையும், அது மற்ற ஜீவர்களுடன் ஒன்றுபட்டது என்பதையும் அறிந்து, நமது வாழ்க்கை முழுவதையும் கடவுளது நிலைக்கு உயர்த்துவது, அவனிடம் வசிப்பது, நமது உணர்வை அவனது உணர்வுடன் இணங்கச் செய்வது, நமது பரிபக்குவமடைந்த இயல்பை அவனது சம்பூரண இயல்பின் பிரதிபிம்பமாகச் செய்வது, நமது சிந்தனை, உணர்ச்சிகள் முற்றிலும் தெய்வீக ஞானத்தினால் தூண்டப்படும்படிச் செய்வது, நமது எல்லாவற்றையும் அவனுக்கே சமர்ப்பித்துவிடுவது, நாம் புரியும் வினைகளையெல்லாம் யக்ஞேச்வரனான அவனுக்கே வேள்வியாக அளிப்பது, புவனேச்சவரனையும் பராபரனாயும் உள்ள அவனது சித்தமும் வினைகளுமே நம் மூலமாக இவ்வுலகில் நடைபெறும்படி விடுவது, அவனது அன்பிலும் களிப்பிலும் நமது விருப்பம் லயித்து விடுவது - இதுவே பூரண நிலை, இதுவே மக்களது வாழ்வின் இறுதியான பொருளும் உண்மையான லட்சியமும், இதுவே கீதையின் பரம ரகசியம்.
ஸ்ரீ அரவிந்தரின் யோக வழி!
சற்றேறக்குறைய இம்மகா உபதேசத்தை, நமது நாட்டில் இதுகாறும் அப்போதைக்கப்போது தோன்றியுள்ள மகான்கள் தங்கள் தங்களது பிரத்தியேக அனுபவ வாயிலாகக் கூறி வந்திருக்கின்றனர். வேத உபநிடதங்களைக் காணம் செய்த ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக உதித்த ஸ்ரீ அரவிந்தரும் இம்மகா உபதேசத்தையே தமது உபதேசத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் கண்ட அனுபவத்தோடும் அவர்கள் வெளியிட்ட உபதேசத்தோடும் நின்றுவிடாமல், அவைகளினின்றும் தொடங்கி, அவைகளுக்கப்பால் சென்று, யோகத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் ஒரு புதிய வழி முறையையும் நிறுவியிருக்கிறார். அவரது யோகம் பூரண யோகம் அல்லது உபநிடதங்கள் கூறும் அதிமன யோகம் (Supramental Yoga) எனப்படும்.
தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்து விட்டதுபோல் தோன்றுகிறது - அன்னை
ஏப்ரல் 3ஆம் நாள் அன்னை இவ்வாறு எழுதினார்:

"நான் ஒரு புதுப்பிறவி எடுத்துள்ளது போலும், என்னுடைய முந்தைய முறைகளும் பழக்கங்களும் இனிப் பயன்படாது என்றும் தோன்றுகிறது. ஒரு காலத்தில் பயனாக இருந்தது இப்பொழுது ஒரு ஆயத்தமாகவே தோன்றுகிறது. இதுவரை நான் ஒன்றுமே செய்யவில்லை. நான் ஆன்மீக வாழ்வு வாழவில்லை, அவ்வாழ்விற்கு இட்டுச் செல்லும் பாதையில் நடக்க மட்டுமே தொடங்கியிருக்கிறேன் என்று உணர்கிறேன். எனக்கு ஒன்றுமே தெரியாது, எதையும் உருவாக்கும் திறன் எனக்கில்லை. எல்லா அனுபவங்களும் இனிமேல் தான் தொடங்க வேண்டியதிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"
எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - உன்னுடைய உள் ஜீவனிலிருந்து... புற ஜீவன் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும், அது உன்னுடைய பேச்சை, சிந்தனையை அல்லது செயலை வற்புறுத்த அல்லது அவற்றிற்கு ஆணையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
எல்லாம் அமைதியாக உள்ளிருந்தே செய்யப்பட வேண்டும் - வேலை செய்தல், பேசுதல், எழுதுதல் எல்லாம் உண்மையான உணர்வின் பாகமாகச் செய்யப்பட வேண்டும் - சாதாரண உணர்வின் சிதறிய அமைதியற்ற இயக்கத்துடன் அல்ல.
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்கும் - அந்தச் செயலே அல்ல.
எல்லாம் அக நிலைமையையே சார்ந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு கணத்திலும் சரியான முறையில் செய்ய வேண்டுமானால் ஒருவன் சரியான உணர்வுடன் இருக்க வேண்டும் - மனத்தினால் வகுக்கப்படும் மாறாத ஒரு விதியைப் பின்பற்றிச் செய்ய முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)