யாராவது என்னிடம் வந்து, "என்னுடைய யோக சாதனைக்காக நான் ஆசிரமத்திற்கு வர விரும்புகிறேன்" என்று சொல்லும் போதெல்லாம், "வேண்டாம் வேண்டாம், அதற்காகவென்றால் இங்கு வரவேண்டாம். மற்றெங்கேயும்விட இங்கு கஷ்டமாக இருக்கும்" என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால், யாராவது, "நான் வேலை செய்ய வருகிறேன், என்னால் எந்த வகையிலாவது உபயோகமாக இருக்கக் கூடுமானால் அதற்காக வருகிறேன்" என்று சொன்னால் அப்போது சரி என்று சொல்கிறேன். ஆனால் யாராவது வந்து, "வெளியே எனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன, அந்தக் கஷ்டங்களை என்னால் வெல்ல முடியவில்லை, இங்கே வந்தால் அது உதவியாக இருக்கும்" என்று சொன்னால், "வேண்டாம் வேண்டாம், இங்கே மிக அதிகக் கஷ்டமாக இருக்கும், உன்னுடைய கஷ்டங்கள் மிகவும் அதிகமாகும்" என்று சொல்லிவிடுகிறேன். அதுதான் உண்மை நிலைமை. ஏனென்றால், இங்குள்ள கஷ்டங்கள் தனிப்பட்ட கஷ்டங்களல்ல, அவை கூட்டுக் கஷ்டங்கள்.
ஆகவே, உன்னுடைய சொந்தக் கஷ்டங்களோடு வெளியிலிருந்து வரும் உராய்தல்கள், தொடர்புகள், எதிர்வினைகள் எல்லாம் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சோதனையாக வருகின்றன. எது உன்னிடமுள்ள பலவீனமோ, எது உனக்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கின்றதோ, அதில்தான் அடி விழும். எந்த வார்த்தையை நீ கேட்கக்கூடாது என்றிருந்தாயோ அந்த வார்த்தையைத்தான் யாராவது சொல்வார்கள்.
எந்தச் செயல் உனக்கு அதிர்ச்சி தருமோ அதைத்தான் யாராவது செயல்வார்கள். எந்தச் சூழ்நிலை எந்த இயக்கம், எந்த நிகழ்ச்சி அல்லது வேறு ஏதாவது நீ வேண்டாம் என்றிருந்தாயோ அதுதான் உன்முன்வந்து நிற்கும், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், நீ யோகம் செய்வது, உனக்காக மட்டுமல்ல, நீ எல்லோருக்காகவும் யோகம் செய்கிறாய் - செய்ய வேண்டுமென்று நிநைக்காமலே, தன்னியக்கமாகவே.
ஆகவே, யாராவது என்னிடம் வந்து, சாந்தி பெறுவதற்காக, அமைதி கிடைப்பதற்காக, ஓய்விற்காக, என்னுடைய யோக சாதனைக்காக நான் இங்கே வர விரும்புகிறேன் என்று சொன்னால், வேண்டாம் வேண்டாம் வேண்டாம், வேறு எங்கேயாவது போய்விடுங்கள், நீங்கள் வேறு எங்கேயிருந்தாலும் இங்கே இருப்பதைவிட அதிக அமைதியோடிருப்பீர்கள் என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால், யாராவது வந்து, "இறைவனது திருப்பணிக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் தரும் எந்த வேலையையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்று சொல்வார்களானால், "நல்லது, உன்னிடம் நல்லெண்ணம், நீடித்து உழைக்கும் திறன், ஏதோ சிறிது திறமை இருந்தால் சரிதான். ஆனால் உனது அக வளர்ச்சிக்கு வேண்டிய தனிமை உனக்குத் தேவை என்றால் வேறு எங்கேயாவது, எங்கேயானாலும் சரிதான், போ, இங்கே வராதே" என்றுதான் சொல்கிறேன்.
புதன், 4 மே, 2011
இறைவனது வேலையைச் செய்ய இங்கு வாருங்கள் - அன்னை
ஸ்ரீ அரவிந்த யோகம்
புண்ணிய பூமியாகிய இப்பாரத நாட்டின்கண் வேத உபநிடதங்களைக் கானம் செய்து சென்ற பண்டைக்கால முனிபுங்கவர்கள், உள்ளவன் ஒருவனேயென்றும், அவ்வொருவனது உண்மையின் பொறிகளே உலகமாயும், உயிர்களாயும் பரிணமித்தனவென்றும், அவனது லீலையினாலும் மாய சக்தியினாலும் இவ்வுயிர்கள் தங்களுக்கும் பரம்பொருக்கும் உள்ள ஒற்றுமையை மறந்து தனியுணர்வு பெற்று அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்பதே இவைகளின் பந்தங்களுக்கும் அல்லல்களுக்கும் காரணமென்றும், இழந்த ஒற்றுமையுணர்வை மீண்டும் பெற்று மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, அவனுடன் ஐக்கியப்படுவதே வாழ்வின் லட்சியம் என்றும் தங்களது அனுபவத்தில் கண்டறிந்தனர்.
இவ்விதம் அஞ்ஞானத்தினால் பிரிந்த உயிர்கள் மீண்டும் கடவுளுடன் ஒற்றுமைப்படுவதற்காகக் கையாளப்படும் முறையே யோகம் எனப்படுவது. நமது முன்னோர்கள் கண்ட யோக முறை இன்றும் நமக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும், நாளடைவில் அவரவர்களது தரிசனத்திற்கும் அனுபவத்திற்கும் தகுந்தாற்போல் யோக லட்சியத்திலும் யோக வழிமுறைகளிலும் வித்தியாசங்கள் ஏற்படவே, உபநிடதங்களின் சாரம் என மதிக்கப்படும் பகவத் கீதை தோன்றி, பல வழிமுறைகளையும் தொகுத்துக் கூறி, அவைகளை ஒன்றோடொன்று இணங்கும்படிச் செய்து, நமக்கு மேலானதொரு வழியையும் காட்டி விளங்குகின்றது. கீதை காட்டும் இவ்வழிதான் என்ன?
கீதையின் பரம இரகசியம்!
நான் என்னும் தன்முனைப்பு நசித்து, தாழ்ந்த, பரிபக்குவமற்ற, முக்குண மயமான மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, உலகத்தை துறந்து, சொரூபம் சலனம் என்பவையற்ற அக்ஷர பிரம்மனில் லயமாய் விடுவது யோகத்தின் ஒரு லட்சியமெனக் கீதை கூறுகிறது. ஆயினும், அதோடு நிற்காமல், வாழ்விலிருந்து கொண்டே ஜீவன் பூரணமடைவதன் பொருட் மேற்சொன்ன அக்ஷர பிரம்மனுக்கும், சர்வ பூதானியாயிருந்து பிரகிருதியின் சலனங்களுக்குட்பட்ட க்ஷர பிரம்மனுக்கும் அப்பால் சுதந்திரமாக நின்று, இவைகளெல்லாவற்றையும் நடத்தும் புருஷோத்தமனது உள்ளமை சத், சித், ஆனந்தம் என்னும் இயல்புகளுடன் ஒன்றுபட்டு (மத்பாவம் ஆகாதா), அவன்பால் சுதந்திரமாயிருந்து, உலகில் ஜீவன் முக்தனாக வினைபுரிவதே மேலான லட்சியமெனக் கீதை எடுத்துக் காட்டுகிறது.
நாம் காணும் அத்யாத்ம உண்மையைப் புறவாழ்க்கையிலும் உபயோகித்து, உலகின் மூலமாகப் பரமேச்வரனையும் உடைமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அதன் முக்கிய உபதேசமாகும். நமது உண்மையான ஜீவன் கடவுளே என்பதையும், அது மற்ற ஜீவர்களுடன் ஒன்றுபட்டது என்பதையும் அறிந்து, நமது வாழ்க்கை முழுவதையும் கடவுளது நிலைக்கு உயர்த்துவது, அவனிடம் வசிப்பது, நமது உணர்வை அவனது உணர்வுடன் இணங்கச் செய்வது, நமது பரிபக்குவமடைந்த இயல்பை அவனது சம்பூரண இயல்பின் பிரதிபிம்பமாகச் செய்வது, நமது சிந்தனை, உணர்ச்சிகள் முற்றிலும் தெய்வீக ஞானத்தினால் தூண்டப்படும்படிச் செய்வது, நமது எல்லாவற்றையும் அவனுக்கே சமர்ப்பித்துவிடுவது, நாம் புரியும் வினைகளையெல்லாம் யக்ஞேச்வரனான அவனுக்கே வேள்வியாக அளிப்பது, புவனேச்சவரனையும் பராபரனாயும் உள்ள அவனது சித்தமும் வினைகளுமே நம் மூலமாக இவ்வுலகில் நடைபெறும்படி விடுவது, அவனது அன்பிலும் களிப்பிலும் நமது விருப்பம் லயித்து விடுவது - இதுவே பூரண நிலை, இதுவே மக்களது வாழ்வின் இறுதியான பொருளும் உண்மையான லட்சியமும், இதுவே கீதையின் பரம ரகசியம்.
ஸ்ரீ அரவிந்தரின் யோக வழி!
சற்றேறக்குறைய இம்மகா உபதேசத்தை, நமது நாட்டில் இதுகாறும் அப்போதைக்கப்போது தோன்றியுள்ள மகான்கள் தங்கள் தங்களது பிரத்தியேக அனுபவ வாயிலாகக் கூறி வந்திருக்கின்றனர். வேத உபநிடதங்களைக் காணம் செய்த ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக உதித்த ஸ்ரீ அரவிந்தரும் இம்மகா உபதேசத்தையே தமது உபதேசத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் கண்ட அனுபவத்தோடும் அவர்கள் வெளியிட்ட உபதேசத்தோடும் நின்றுவிடாமல், அவைகளினின்றும் தொடங்கி, அவைகளுக்கப்பால் சென்று, யோகத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் ஒரு புதிய வழி முறையையும் நிறுவியிருக்கிறார். அவரது யோகம் பூரண யோகம் அல்லது உபநிடதங்கள் கூறும் அதிமன யோகம் (Supramental Yoga) எனப்படும்.
இவ்விதம் அஞ்ஞானத்தினால் பிரிந்த உயிர்கள் மீண்டும் கடவுளுடன் ஒற்றுமைப்படுவதற்காகக் கையாளப்படும் முறையே யோகம் எனப்படுவது. நமது முன்னோர்கள் கண்ட யோக முறை இன்றும் நமக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும், நாளடைவில் அவரவர்களது தரிசனத்திற்கும் அனுபவத்திற்கும் தகுந்தாற்போல் யோக லட்சியத்திலும் யோக வழிமுறைகளிலும் வித்தியாசங்கள் ஏற்படவே, உபநிடதங்களின் சாரம் என மதிக்கப்படும் பகவத் கீதை தோன்றி, பல வழிமுறைகளையும் தொகுத்துக் கூறி, அவைகளை ஒன்றோடொன்று இணங்கும்படிச் செய்து, நமக்கு மேலானதொரு வழியையும் காட்டி விளங்குகின்றது. கீதை காட்டும் இவ்வழிதான் என்ன?
கீதையின் பரம இரகசியம்!
நான் என்னும் தன்முனைப்பு நசித்து, தாழ்ந்த, பரிபக்குவமற்ற, முக்குண மயமான மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, உலகத்தை துறந்து, சொரூபம் சலனம் என்பவையற்ற அக்ஷர பிரம்மனில் லயமாய் விடுவது யோகத்தின் ஒரு லட்சியமெனக் கீதை கூறுகிறது. ஆயினும், அதோடு நிற்காமல், வாழ்விலிருந்து கொண்டே ஜீவன் பூரணமடைவதன் பொருட் மேற்சொன்ன அக்ஷர பிரம்மனுக்கும், சர்வ பூதானியாயிருந்து பிரகிருதியின் சலனங்களுக்குட்பட்ட க்ஷர பிரம்மனுக்கும் அப்பால் சுதந்திரமாக நின்று, இவைகளெல்லாவற்றையும் நடத்தும் புருஷோத்தமனது உள்ளமை சத், சித், ஆனந்தம் என்னும் இயல்புகளுடன் ஒன்றுபட்டு (மத்பாவம் ஆகாதா), அவன்பால் சுதந்திரமாயிருந்து, உலகில் ஜீவன் முக்தனாக வினைபுரிவதே மேலான லட்சியமெனக் கீதை எடுத்துக் காட்டுகிறது.
நாம் காணும் அத்யாத்ம உண்மையைப் புறவாழ்க்கையிலும் உபயோகித்து, உலகின் மூலமாகப் பரமேச்வரனையும் உடைமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அதன் முக்கிய உபதேசமாகும். நமது உண்மையான ஜீவன் கடவுளே என்பதையும், அது மற்ற ஜீவர்களுடன் ஒன்றுபட்டது என்பதையும் அறிந்து, நமது வாழ்க்கை முழுவதையும் கடவுளது நிலைக்கு உயர்த்துவது, அவனிடம் வசிப்பது, நமது உணர்வை அவனது உணர்வுடன் இணங்கச் செய்வது, நமது பரிபக்குவமடைந்த இயல்பை அவனது சம்பூரண இயல்பின் பிரதிபிம்பமாகச் செய்வது, நமது சிந்தனை, உணர்ச்சிகள் முற்றிலும் தெய்வீக ஞானத்தினால் தூண்டப்படும்படிச் செய்வது, நமது எல்லாவற்றையும் அவனுக்கே சமர்ப்பித்துவிடுவது, நாம் புரியும் வினைகளையெல்லாம் யக்ஞேச்வரனான அவனுக்கே வேள்வியாக அளிப்பது, புவனேச்சவரனையும் பராபரனாயும் உள்ள அவனது சித்தமும் வினைகளுமே நம் மூலமாக இவ்வுலகில் நடைபெறும்படி விடுவது, அவனது அன்பிலும் களிப்பிலும் நமது விருப்பம் லயித்து விடுவது - இதுவே பூரண நிலை, இதுவே மக்களது வாழ்வின் இறுதியான பொருளும் உண்மையான லட்சியமும், இதுவே கீதையின் பரம ரகசியம்.
ஸ்ரீ அரவிந்தரின் யோக வழி!
சற்றேறக்குறைய இம்மகா உபதேசத்தை, நமது நாட்டில் இதுகாறும் அப்போதைக்கப்போது தோன்றியுள்ள மகான்கள் தங்கள் தங்களது பிரத்தியேக அனுபவ வாயிலாகக் கூறி வந்திருக்கின்றனர். வேத உபநிடதங்களைக் காணம் செய்த ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக உதித்த ஸ்ரீ அரவிந்தரும் இம்மகா உபதேசத்தையே தமது உபதேசத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் கண்ட அனுபவத்தோடும் அவர்கள் வெளியிட்ட உபதேசத்தோடும் நின்றுவிடாமல், அவைகளினின்றும் தொடங்கி, அவைகளுக்கப்பால் சென்று, யோகத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் ஒரு புதிய வழி முறையையும் நிறுவியிருக்கிறார். அவரது யோகம் பூரண யோகம் அல்லது உபநிடதங்கள் கூறும் அதிமன யோகம் (Supramental Yoga) எனப்படும்.
தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்து விட்டதுபோல் தோன்றுகிறது - அன்னை
ஏப்ரல் 3ஆம் நாள் அன்னை இவ்வாறு எழுதினார்:

"நான் ஒரு புதுப்பிறவி எடுத்துள்ளது போலும், என்னுடைய முந்தைய முறைகளும் பழக்கங்களும் இனிப் பயன்படாது என்றும் தோன்றுகிறது. ஒரு காலத்தில் பயனாக இருந்தது இப்பொழுது ஒரு ஆயத்தமாகவே தோன்றுகிறது. இதுவரை நான் ஒன்றுமே செய்யவில்லை. நான் ஆன்மீக வாழ்வு வாழவில்லை, அவ்வாழ்விற்கு இட்டுச் செல்லும் பாதையில் நடக்க மட்டுமே தொடங்கியிருக்கிறேன் என்று உணர்கிறேன். எனக்கு ஒன்றுமே தெரியாது, எதையும் உருவாக்கும் திறன் எனக்கில்லை. எல்லா அனுபவங்களும் இனிமேல் தான் தொடங்க வேண்டியதிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"
எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - உன்னுடைய உள் ஜீவனிலிருந்து... புற ஜீவன் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும், அது உன்னுடைய பேச்சை, சிந்தனையை அல்லது செயலை வற்புறுத்த அல்லது அவற்றிற்கு ஆணையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
எல்லாம் அமைதியாக உள்ளிருந்தே செய்யப்பட வேண்டும் - வேலை செய்தல், பேசுதல், எழுதுதல் எல்லாம் உண்மையான உணர்வின் பாகமாகச் செய்யப்பட வேண்டும் - சாதாரண உணர்வின் சிதறிய அமைதியற்ற இயக்கத்துடன் அல்ல.
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்கும் - அந்தச் செயலே அல்ல.
எல்லாம் அக நிலைமையையே சார்ந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு கணத்திலும் சரியான முறையில் செய்ய வேண்டுமானால் ஒருவன் சரியான உணர்வுடன் இருக்க வேண்டும் - மனத்தினால் வகுக்கப்படும் மாறாத ஒரு விதியைப் பின்பற்றிச் செய்ய முடியாது.
ஆன்மீகத் தாய் - ஸ்ரீ அரவிந்தர்
அகவாழ்விலும், புறவாழ்விலும் அதற்குப் பதிலாக இடங்கொள்ள முடியும். இயற்கையான அறிவும், ஒளிவுமறைவற்ற அறிவுத்திறனும் உடைய யாரும் இதில் குழப்பமடையத் தேவையில்லை. தூல யதார்த்த நிலை அதைவிட மேலான ஆன்மீக உண்மையின் குறுக்கே நிற்கவோ, அது உண்மையாக இருப்பதைத் தடுக்கவோ முடியாது. இவரை என்னுடைய உண்மையான அன்னை என்று அவர் சொல்வது முற்றிலும் சரி, ஏனெனில் அவர் அவனுக்கு அகவாழ்வில் ஒரு புதுப்பிறவி அளித்து அதிகத் தெய்வீகத் தன்மை கொண்ட வாழ்விற்காக அவனைப் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆன்மீகத் தாய்மை என்பது இந்த ஆசிரமம் கற்பனை செய்துகொண்டது அல்ல, அது ஒரு நித்தியமான உண்மை, நீண்ட நெடுங்காலமாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அறியப்பட்டிருந்த உண்மை. உடலால் ஏற்படும் உறவுக்கும் சைத்திய ஆன்மீக உறவுக்கும் இடையே நான் கிழித்துள்ள கோடும் புதிய கண்டுபிடிப்பு அன்று எல்லா இடங்களிலும் தெரிந்து, புரிந்துகொண்ட கருத்து, எல்லோருக்கும் தெளிவாக எளிதாகப் புரியக்கூடிய கருத்து அது.
தேவையான ஒன்றின்மேல் முழுக் கவனம் செலுத்து, அதைக் கலைக்கும்படியான அல்லது உன்னை வழியைவிட்டு விலக்கும்படியான எல்லாக் கருத்துக்களையும் சக்திகளையும், அவை வந்தால் ஒதுக்கித்தள்ளு. இந்த விஷயங்களுக்கு சம்மதம் அளிக்கும் வழக்கத்தை பிராணன் விடவேண்டும். அதைச் செய்ய முதலில் மனச் சம்மதத்தை அடியோடு மறுத்துவிட வேண்டும். ஏனென்றால், மனத்தின் ஆதரவு அவற்றிற்கு மற்றபடி இருக்கக்கூடிய சக்தியை அதிகப்படுத்துகிறது. மனத்திலும் ஆழ்ந்த உணர்ச்சி ஜீவனிலும் (Emotional Being) சரியான மனப்பான்மையை நாட்டு - முரண்பட்ட சக்திகள் எழும்போதும் அதைச் சிக்கெனப்பிடித்துக்கொள். அந்த சைத்திய உளப்பாங்கில் உறுதியாக நின்று அவற்றைத் துரத்து.
அன்னையின் உண்மையான குழந்தைகள்!
அவருக்குத் திறந்திருப்பவர்கள், அவருடைய உள் ஜீவனில் அவருடன் நெருங்கியிருப்பவர்கள், அவருடைய சித்தத்துடன் ஒன்றானவர்கள் இவர்களே அன்னையுடன் மிக நெருங்கியுள்ள அவருடைய குழந்தைகளாவர் - உடலால் அவருடன் அதிக நெருக்கமாக இருக்கிறவர்கள் அல்ல.
செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது
ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும்.
ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக் கூறுவேன், அது ஒரு சாபம்.
ஆகவே உன்னிடம் பணம் இருந்தால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம் அதைக் கொடுத்துவிடுவதே. ஆனால், விவேகமில்லாமல் கொடுக்கக் கூடாது. பரோபகாரிகள் என்பவர்கள் கொடுப்பதைப் போல் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப் கொடுப்பவர்கள் உள்ளத்தில் தான் மிகவும் நல்லவன், ஈகைக் குணமுடையவன், முக்கியமானவன் என்கிற உணர்வு நிரம்பிவிடுகிறது. நீ சாத்வீக முறையில் செயல்பட வேண்டும். அதாவது, பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே, ஒவ்வொருவனும், தன்னுடைய மிக உயர்ந்த உணர்வு நிலையிலிருந்து தன்னிடமுள்ள பணத்தை மிகப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் பணத்திற்கு மதிப்பு உண்டு என்பது முற்றிலும் உண்மை. பணத்தைச் செலவு செய்யும்போதுதான் அதனால் பயன் உண்டாகிறது. எல்லோருடைய விஷயத்திலும் அப்படித்தான்.
செல்வம் ஒரு சக்தி - முனூபே ஒரு தடவை நான் உங்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன் - அது இயற்கையின் ஒரு சக்தி, அது புழக்கத்திற்கு ஒரு சாதாரணமாக ஓர் இயங்கு சக்தியாக இருக்க வேண்டும். ஓடும் நீர் ஓர் இயங்கு சக்தியாக இருப்பதைப்போல. அது பொருள்களை உற்பத்தி செய்ய இணைத்து உருவாக்க உதவும். பணம் ஒரு வசதியான சாதனம், உண்மையில் அது பொருள்கள் முழு அளவிலும் தாராளமாகவும் புழக்கத்தில் இருக்கச் செய்ய பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே.
இந்த சக்தி, யார் அதை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவார்களோ அவர்கள் கையில் இருக்க வேண்டும். அதாவது, நான் தொடக்கத்தில் சொன்னதுபோல், ஏதோவொரு வகையில் சொந்த ஆசையையும் எல்லாவிதப் பற்றுகளையும் அறுத்துவிட்டவர்கள் கையில் இருக்க வேண்டும். இதோடு அவர்கள் இப்பூவுலகின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த அறிவு விளக்கம் உடையவர்களாகவும் இந்தத் தேவைகளையெல்லாம் இணைத்து உருவாக்குவது எப்படி என்கிற பூரண ஞானமும், இந்தச் சாதனங்களைக் கொண்டு பண சக்தியைப் பயன்படுத்தும் திறமையும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
இத்துடன் இந்த ஜீவர்களிடம் உயர்ந்த ஆன்மீக ஞானமும் இருந்தால் அவர்களால் இந்த சக்தியைப் பயன்படுத்தி தெய்வ ஆற்றல், சக்தி, அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனுடையதான ஒன்றை புவி மீது படிப்படியாக உருவாக்க முடியும்.
- அன்னை
ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக் கூறுவேன், அது ஒரு சாபம்.
ஆகவே உன்னிடம் பணம் இருந்தால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம் அதைக் கொடுத்துவிடுவதே. ஆனால், விவேகமில்லாமல் கொடுக்கக் கூடாது. பரோபகாரிகள் என்பவர்கள் கொடுப்பதைப் போல் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப் கொடுப்பவர்கள் உள்ளத்தில் தான் மிகவும் நல்லவன், ஈகைக் குணமுடையவன், முக்கியமானவன் என்கிற உணர்வு நிரம்பிவிடுகிறது. நீ சாத்வீக முறையில் செயல்பட வேண்டும். அதாவது, பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே, ஒவ்வொருவனும், தன்னுடைய மிக உயர்ந்த உணர்வு நிலையிலிருந்து தன்னிடமுள்ள பணத்தை மிகப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் பணத்திற்கு மதிப்பு உண்டு என்பது முற்றிலும் உண்மை. பணத்தைச் செலவு செய்யும்போதுதான் அதனால் பயன் உண்டாகிறது. எல்லோருடைய விஷயத்திலும் அப்படித்தான்.
செல்வம் ஒரு சக்தி - முனூபே ஒரு தடவை நான் உங்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன் - அது இயற்கையின் ஒரு சக்தி, அது புழக்கத்திற்கு ஒரு சாதாரணமாக ஓர் இயங்கு சக்தியாக இருக்க வேண்டும். ஓடும் நீர் ஓர் இயங்கு சக்தியாக இருப்பதைப்போல. அது பொருள்களை உற்பத்தி செய்ய இணைத்து உருவாக்க உதவும். பணம் ஒரு வசதியான சாதனம், உண்மையில் அது பொருள்கள் முழு அளவிலும் தாராளமாகவும் புழக்கத்தில் இருக்கச் செய்ய பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே.
இந்த சக்தி, யார் அதை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவார்களோ அவர்கள் கையில் இருக்க வேண்டும். அதாவது, நான் தொடக்கத்தில் சொன்னதுபோல், ஏதோவொரு வகையில் சொந்த ஆசையையும் எல்லாவிதப் பற்றுகளையும் அறுத்துவிட்டவர்கள் கையில் இருக்க வேண்டும். இதோடு அவர்கள் இப்பூவுலகின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த அறிவு விளக்கம் உடையவர்களாகவும் இந்தத் தேவைகளையெல்லாம் இணைத்து உருவாக்குவது எப்படி என்கிற பூரண ஞானமும், இந்தச் சாதனங்களைக் கொண்டு பண சக்தியைப் பயன்படுத்தும் திறமையும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
இத்துடன் இந்த ஜீவர்களிடம் உயர்ந்த ஆன்மீக ஞானமும் இருந்தால் அவர்களால் இந்த சக்தியைப் பயன்படுத்தி தெய்வ ஆற்றல், சக்தி, அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனுடையதான ஒன்றை புவி மீது படிப்படியாக உருவாக்க முடியும்.
- அன்னை
கல்வியும் சுதந்திரமும் - அன்னை
இங்கு தரப்படும் கல்வியின் சிறந்த அம்சம் என்னவென்றால் அது சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் இங்குள்ள வாழ்க்கை அதிகபட்சமான செயல் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இங்கு விதிகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் மிகக் குறைந்தபட்சமாக உள்ளன.
பெரும்பாலும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி கல்வியூட்டுகிறார்கள்? "இதைச் செய்யாதே", "நீ அதைச் செய்யக்கூடாது", "இதைச் செய்", "போ, அதைச் செய்" என்று கட்டளையிட்டபடி இருக்கிறார்கள். கட்டளைகள், விதிகள் என்றால் உங்களுக்குத் தெரியும், அந்தக் கல்வி முறைக்கும் இங்கு பின்பற்றப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
மற்றெல்லா இடங்களிலுமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இங்குள்ளவற்றை விட மிகவும் கண்டிப்பான விதிகள் உண்டு. ஆகவே, முன்னேற வேண்டும் என்னும் கண்டிப்பான விதி எதையும் உங்கள் மீது சுமத்தாததால் நீங்கள் விரும்பிய போது முன்னேறுகிறீர்கள், விரும்பாதபோது முன்னேறுவதில்லை, எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் (மிகச் சாவதானமாக எல்லவற்றையும் செய்கிறீர்கள்) ஒருவருமே முயற்சி செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். முயற்சி செய்கிறவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னியல்பாக முயல்கிறார்கள்.
ஆன்மீக நோக்கிலிருந்து பார்க்கும்போது இது கோடி மடங்கு அதிகப் பயனுள்ளது. முன்னேற வேண்டியதின் தேவையை உன்னுள் உணர்வதனால், இயல்பாக ஒரு தூண்டுதல் உன்னை முன்னே தள்ளுவதனால் செய்யும் முன்னேற்றம் ஒரு விதியாக உன்மேல் சுமத்தப்படும் முன்னேற்றத்தைவிட ஆன்மீக நோக்கில் கோடி மடங்கு உயர்வானது. காரியங்களை நன்றாகச் செய்ய வேண்டுமென உன்னுள் முயல்கின்றவையெல்லாம் தன்னியல்பாகவும், நேர்மையுடனும் அப்படிச் செய்ய முயல்கின்றன. அந்தத் தூண்டுதல் உன் உள்ளே இருந்தே வருகின்றது. நன்றாகச் செய்தால் வெகுமதிகள் கிடைக்கும், மோசமாகச் செய்தால் தண்டனைகள் கிடைக்கும் என்று சொன்னதனால் அன்று. நமது கல்வி முறை அந்த அடிப்படையில் அமையவில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உனது முயற்சியைப் பாராட்டும் வகையில் ஏதாவது வரலாம். ஆனால் அதை மனதில் கொண்டு நீ முயற்சி செய்யவில்லை அதாவது, இந்தப் பாராட்டு முன்னாலேயே அறிவிக்கப்படவில்லை, செய்யத் தவறினால் தண்டனைகள் கிடைக்கும் என்ற பயமுறுத்தலும் அதோடு இணைக்கப்படவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. நன்றாகச் செய்தோம் என்ற உணர்ச்சியே எல்லா வெகுமதிகளிலும் சிறந்த வெகுமதியாகத் தோன்றும்படி இங்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஒருவன் மோசமாகச் செய்யும்போது அவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான், அவன் சங்கடப்படுகிறான், மகிழ்ச்சியை இழக்கிறான், மனத்தில் அமைதியின்றி இருக்கிறான், இதுவே மிகவும் கண்கூடாக அவன்பெறும் தண்டனை. ஆகவே, ஆன்மீக வளர்ச்சி நோக்கில் இந்த இயக்கங்களெல்லாம், அவை ஒரு புறச்சட்டத்தின் விளைவாக வருவதைவிடக் கோடி மடங்கு அதிகப் பயனுடையவைகளாக இருக்கின்றன.
பெரும்பாலும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி கல்வியூட்டுகிறார்கள்? "இதைச் செய்யாதே", "நீ அதைச் செய்யக்கூடாது", "இதைச் செய்", "போ, அதைச் செய்" என்று கட்டளையிட்டபடி இருக்கிறார்கள். கட்டளைகள், விதிகள் என்றால் உங்களுக்குத் தெரியும், அந்தக் கல்வி முறைக்கும் இங்கு பின்பற்றப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
மற்றெல்லா இடங்களிலுமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இங்குள்ளவற்றை விட மிகவும் கண்டிப்பான விதிகள் உண்டு. ஆகவே, முன்னேற வேண்டும் என்னும் கண்டிப்பான விதி எதையும் உங்கள் மீது சுமத்தாததால் நீங்கள் விரும்பிய போது முன்னேறுகிறீர்கள், விரும்பாதபோது முன்னேறுவதில்லை, எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் (மிகச் சாவதானமாக எல்லவற்றையும் செய்கிறீர்கள்) ஒருவருமே முயற்சி செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். முயற்சி செய்கிறவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னியல்பாக முயல்கிறார்கள்.
ஆன்மீக நோக்கிலிருந்து பார்க்கும்போது இது கோடி மடங்கு அதிகப் பயனுள்ளது. முன்னேற வேண்டியதின் தேவையை உன்னுள் உணர்வதனால், இயல்பாக ஒரு தூண்டுதல் உன்னை முன்னே தள்ளுவதனால் செய்யும் முன்னேற்றம் ஒரு விதியாக உன்மேல் சுமத்தப்படும் முன்னேற்றத்தைவிட ஆன்மீக நோக்கில் கோடி மடங்கு உயர்வானது. காரியங்களை நன்றாகச் செய்ய வேண்டுமென உன்னுள் முயல்கின்றவையெல்லாம் தன்னியல்பாகவும், நேர்மையுடனும் அப்படிச் செய்ய முயல்கின்றன. அந்தத் தூண்டுதல் உன் உள்ளே இருந்தே வருகின்றது. நன்றாகச் செய்தால் வெகுமதிகள் கிடைக்கும், மோசமாகச் செய்தால் தண்டனைகள் கிடைக்கும் என்று சொன்னதனால் அன்று. நமது கல்வி முறை அந்த அடிப்படையில் அமையவில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உனது முயற்சியைப் பாராட்டும் வகையில் ஏதாவது வரலாம். ஆனால் அதை மனதில் கொண்டு நீ முயற்சி செய்யவில்லை அதாவது, இந்தப் பாராட்டு முன்னாலேயே அறிவிக்கப்படவில்லை, செய்யத் தவறினால் தண்டனைகள் கிடைக்கும் என்ற பயமுறுத்தலும் அதோடு இணைக்கப்படவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. நன்றாகச் செய்தோம் என்ற உணர்ச்சியே எல்லா வெகுமதிகளிலும் சிறந்த வெகுமதியாகத் தோன்றும்படி இங்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஒருவன் மோசமாகச் செய்யும்போது அவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான், அவன் சங்கடப்படுகிறான், மகிழ்ச்சியை இழக்கிறான், மனத்தில் அமைதியின்றி இருக்கிறான், இதுவே மிகவும் கண்கூடாக அவன்பெறும் தண்டனை. ஆகவே, ஆன்மீக வளர்ச்சி நோக்கில் இந்த இயக்கங்களெல்லாம், அவை ஒரு புறச்சட்டத்தின் விளைவாக வருவதைவிடக் கோடி மடங்கு அதிகப் பயனுடையவைகளாக இருக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)